இந்தோனேசியா: செம்பாக்கா சூறாவளியில் குறைந்தது 41 பேர் மரணம்
இந்தோனேசியாவின் ஜாவா தீவைத் தாக்கிய செம்பாக்கா சூறாவளியில், குறைந்தது 41 பேர் மாண்டனர்.
இந்தோனேசியாவின் ஜாவா தீவைத் தாக்கிய செம்பாக்கா சூறாவளியில், குறைந்தது 41 பேர் மாண்டனர்.
முன்பு அறிவிக்கப்பட்ட மாண்டோர் எண்ணிக்கையை விட, அது ஒரு மடங்கிற்கும் அதிகம்.
சூறாவளியால் கடும் வெள்ளமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. சுமார் 28 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேறி, பாதுகாப்பான இடங்களை நாடிச் செல்லவேண்டிய நிலை எழுந்திருக்கிறது.
கடந்த வாரம், ஜாவாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 25 பேர் மாண்டனர். சூறாவளியால் கிட்டத்தட்ட ஐயாயிரம் வீடுகள் சேதமடைந்தன.
சுமார் மூவாயிரம் வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின.