சீனா: தாயைக் கொன்ற தனையன்
சீனாவின் சீச்சுவான் மாநிலத்தில், 13 வயதுச் சிறுவன், தனது தாயைக் கொன்று அவரது தலையைத் துண்டித்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறான்.
சீனாவின் சீச்சுவான் மாநிலத்தில், 13 வயதுச் சிறுவன், தனது தாயைக் கொன்று அவரது தலையைத் துண்டித்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறான்.
அந்தச் சிறுவன், தான் செய்த கொலையைக் காணொளியாக எடுத்து, WeChat செயலி வழி தனது நண்பர்களுக்கு அனுப்பினான்.
அந்த நண்பர்களில் ஒருவர், தமது தாயாரிடம் காணொளியைக் காட்டினார். தாயார் அது குறித்துக் காவல்துறையினருக்குப் புகார் கொடுத்தார்.
கொலைச் சம்பவம் வென்சிங் நகரில் நடந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, சிறுவனுக்கும் அவனது தாயாருக்கும் இடையே சண்டை மூண்டதைத் தொடர்ந்து அவன் தனது தாயாரைக் கொன்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தாயார் மாண்டதைத் தொடர்ந்து அவரது தலையை வெட்டி அதனை வாளி ஒன்றுக்குள் வைத்து பின்னர் சாக்கடை ஒன்றில் சிறுவன் வீசியெறிந்ததாக ஊடகங்கள் கூறின.
பள்ளியில் அந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.