மலேசியாவில் நிகழ்ந்த விபத்தில் 3 உடன்பிறந்தோர் மரணம்
5 வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு விபத்தில் 3 உடன்பிறந்தோர் மரணமடைந்தனர்.
5 வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு விபத்தில் 3 உடன்பிறந்தோர் மரணமடைந்தனர்.
மலேசியாவின் ஈப்போ (Ipoh) மாநிலத்தில் நிகழ்ந்தது அந்தத் துயரச் சம்பவம்.
மீன்களுக்கான உரத்தைக் கொண்டு சென்றுகொண்டிருந்த மிக நீளமான வாகனம் போக்குவரத்து விளக்கு மாறுவதற்காகக் காத்துக்கொண்டிருந்த 4 வாகனங்களைப் பின்னாலிருந்து மோதியது.
மாண்டவர்களில் இருவர் 8 வயது இரட்டையர். மற்றொருவர் அவர்களின் 22 வயதுச் சகோதரி.
மூவரும் காரின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்ததாகக் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
காரை ஓட்டிய தந்தையும், முன்னிருக்கையில் அமர்ந்திருந்த தாயும் அவர்களின் இன்னொரு மகளும் காயங்களுடன் உயிர் பிழைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.