இந்திய மருத்துமனையில் உயிர்வாயுத் தட்டுப்பாடு - - 60க்கு உயர்ந்துள்ள மரண எண்ணிக்கை
இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் உயிர்வாயுத் தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து இதுவரை குறைந்தது 60 பிள்ளைகள் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் உயிர்வாயுத் தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து இதுவரை குறைந்தது 60 பிள்ளைகள் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விசாரணை தொடங்கியிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
ஆனால் அசம்பாவிதத்திற்குக் காரணம் உயிர்வாயுத் தட்டுப்பாடு என்பதை அவர்கள் மறுத்து வருகின்றனர். கடந்த 5 நாட்களில் 60 பேர் மாண்டது உண்மை, ஆனால் நடந்ததற்கு உயிர்வாயுத் தட்டுப்பாடு காரணம் என நினைக்கவில்லை என்று மாவட்டக் காவல்துறை ஆணையாளர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் 30 பிள்ளைகள் மாண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
உயிர்வாயுவை விநியோகிப்பவர்களுக்குக் கட்டணம் செலுத்தப்படாததால் மருத்துவமனைக்கு அது அனுப்பப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க:
இந்தியா: மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவர்கள் மரணம்