தாய்லந்து தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறலாம்
நீண்ட காலம் எதிர்பார்த்துக் காத்திருந்த தாய்லந்துத் தேர்தல் அநேகமாய் அடுத்த ஆண்டு நடைபெறலாம்.
நீண்ட காலம் எதிர்பார்த்துக் காத்திருந்த தாய்லந்துத் தேர்தல் அநேகமாய் அடுத்த ஆண்டு நடைபெறலாம்.
அக்டோபர் நடுவுக்கும் டிசம்பர் மாதத்திற்கும் இடையே அது நடைபெறலாம் என்று 'பேங்காக் போஸ்ட்' (Bangkok Post) நாளேடு கூறியது.
தேர்தல் நடைபெறுவதற்கு முன் நான்கு மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும்.
ஒப்புதலைப் பெற்ற மசோதாக்கள், சட்டங்களாய் நடப்புக்கு வந்த 150 நாள்களுக்குள் தேர்தல் நடைபெறுவேண்டும்.