முதலிரவைச் சிறையில் கழித்த மாப்பிள்ளை
திருமண வரவேற்பு முடிந்த முதலிரவைச் சிறையில் கழித்த மலேசியாவைச் சேர்ந்த 35 வயது மாப்பிள்ளையின் கதை இது.
திருமண வரவேற்பு முடிந்த முதலிரவைச் சிறையில் கழித்த மலேசியாவைச் சேர்ந்த 35 வயது மாப்பிள்ளையின் கதை இது.
ஹோட்டல் ஒன்றின் விருந்து மண்டபத்தில் நடந்தது வரவேற்பு.
வரவேற்புக்கு வந்திருந்த விருந்தினர்களில் ஒருவர் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய சந்தேகநபர்.
அவரை அங்கு கைது செய்ய முயன்றனர் காவல் அதிகாரிகள்.
அதை மாப்பிள்ளையும் அவருடன் சேர்ந்து 40 ஆடவர்களும் தடுத்து நிறுத்த முயன்றனர்.
அப்போது காவல் அதிகாரி ஒருவரின் மீது கண்ணாடி போத்தலை வீசி எறிந்தார் மாப்பிள்ளை.
இதனால் அதிகாரியின் இடக்கையில் காயம் ஏற்பட்டது.
கலவரத்தின் நடுவில், காவல் அதிகாரிகள் பிடிக்க வந்த 38 வயது சந்தேக நபர் தப்பி ஓடி விட்டார் என்பதுதான் அடுத்த சோகமான செய்தி.