காஷ்மீரில் மற்றொரு மோதல் : 5 பேர் பலி
காஷ்மீர்ப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர்கள் இருவரும் கிளர்ச்சியாளர்கள் மூவரும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
காஷ்மீர்ப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர்கள் இருவரும் கிளர்ச்சியாளர்கள் மூவரும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
சர்ச்சைக்குரிய இமாலயப் பகுதியான காஷ்மீரில் நிகழ்ந்த ஆக அண்மை வன்முறைச் சம்பவம் அது.
ஸ்ரீநகருக்குச் சுமார் 50 கிலோமீட்டர் தெற்கிலுள்ள அவுனிரா கிராமத்தில் கிளர்ச்சியாளர்கள் பதுங்கிக்கொண்டிருந்ததாக இந்திய ராணுவத்துக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான இந்திய வீரர்கள் கிராமத்தை முற்றுகையிட்டனர்.
ராணுவத்திற்கும் கிளர்ச்சிப் படைக்கும் இடையில் பலமான மோதல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
மாண்ட கிளர்ச்சியாளர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.