Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜொகூர் பாருவில் நாளை சில சாலைகள் மூடப்படும்

மலேசியாவின் ஜொகூர் மாநில இளவரசிக்கு நாளை திருமணம் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு ஜொகூர் பாரு நகரில் சில சாலைகள் மூடப்படும்.

வாசிப்புநேரம் -
ஜொகூர் பாருவில் நாளை சில சாலைகள் மூடப்படும்

Causway புகைப்படம்.

மலேசியாவின் ஜொகூர் மாநில இளவரசிக்கு நாளை திருமணம் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு ஜொகூர் பாரு நகரில் சில சாலைகள் மூடப்படும்.

ஜாலான் ஆயர் மொலெக், ஜாலான் யாஹ்யா அவால், ஜாலான் டத்தோ ஓன் உள்ளிட்ட சில சாலைகள் மூடப்படுவதாக மாநிலக் காவல்துறை ஆணையாளர் வான் அகமது நஜ்முடின் முகமது இன்று தெரிவித்தார். நாளை காலை 7 மணி முதல், திருமணச் சடங்குகள் முடியும் வரை சாலைகள் மூடப்படும் என்று திரு வான் அகமது கூறினார்.

கிட்டத்தட்ட 300 காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்று வழிகளில் பயணம் செய்யுமாறு திரு வான் அகமது பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

ஜொகூர் இளவரசி அமினா மைமுனா இஸ்கண்டாரியா சுல்தான் இப்ராஹிம், ஹாலந்து நாட்டைச் சேர்ந்த திரு டென்னிஸ் முகமது அப்துல்லாவைத் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்