Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கடும் புயல் காற்றினால் பெய்ச்சிங்கில் விமானச் சேவைகள் ரத்து

கடுமையான புயல் காற்றின் காரணமாக, சீனாவின் பெய்ச்சிங் அனைத்துலக விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான விமானசேவைகள் தடைபட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
கடும் புயல் காற்றினால் பெய்ச்சிங்கில் விமானச் சேவைகள் ரத்து

(படம்: AFP/Wang Zhao)

கடுமையான புயல் காற்றின் காரணமாக, சீனாவின் பெய்ச்சிங் அனைத்துலக விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான விமானச் சேவைகள் தடைபட்டுள்ளன.

அங்கு பெய்த கன மழையின் காற்றின் காரணமாக, நேற்று மட்டும் 300க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. நேற்று முன் தினம், 400க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

அவ்வாறு பெய்யும் கன மழையின் காரணமாக, சீனாவின் சீச்சுவான் மாநிலத்தின் தென் மேற்கு வட்டாரத்தில் உள்ள ஜியூ ஸாய் கோ (Jiu Zhai Gou) பகுதியில் நிலச் சரிவு ஏற்படக்கூடும் என்று சீனாவின் தேசிய வானிலை நிலையம் எச்சரித்தது. அப்பகுதியில், இந்த வாரம் நிலநடுக்கம் ஒன்றும் ஏற்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்