பிள்ளைகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அன்னைக்கு 75 ஆண்டுச் சிறைத்தண்டனை
சொந்தப் பெண் பிள்ளைகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஒற்றைத் தாயாருக்கு 75 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜொகூர் பாரு: சொந்தப் பெண் பிள்ளைகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஒற்றைத் தாயாருக்கு 75 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பிள்ளைகள் 10வயதுக்கும் 13வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
கூலாய் பகுதியைச் சேர்ந்தவர் அந்த 39வயதுத் தாயார். மலிவுக் கட்டண ஹோட்டலில் தனது பிள்ளைகளை வலுக்கட்டயமாக இரு ஆடவர்களுடன் 5 நாட்களுக்குப் பாலுறவில் ஈடுபடுத்தினார். அந்த ஹோட்டல் ஜொகூர் பாருவில் உள்ளது.
அந்தச் சம்பவத்தால் பிள்ளைகள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக அரசாங்கத் தரப்பு கூறியது.