சிரியாவில் மாண்ட ஐ.எஸ் தலைவரின் வேலையைத் தொடரும் 4 மலேசியர்கள்
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் மலேசியத் தலைவர் முகமது வேண்டி முகமது ஜேடியின் பொறுப்பை 4 மலேசியர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதை மலேசியக் காவல்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் மலேசியத் தலைவர் முகமது வேண்டி முகமது ஜேடியின் பொறுப்பை 4 மலேசியர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதை மலேசியக் காவல்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது.
பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் வேலையைச் செய்த முகமது வேண்டி சிரியாவில் நடந்த ஆகாயத் தாக்குதலில் மாண்டதை மலேசியா அண்மையில் உறுதிப்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து 4 மலேசியர்கள் அவரது வேலையைத் தொடர்வதாகப் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
முகமது ரஃபியுடின், அக்பர் ஸைனால், முகமது ஃபுஸைல், முகமது ஸஹார் ஆகியோர் அந்த நால்வர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.