மலேசிய விரைவுச்சாலையில் தீப் பற்றிய சுற்றுலாப் பேருந்து
இந்தோனேசிய சுற்றுப்பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றில் தீப் பற்றிக்கொண்டது.
இந்தோனேசிய சுற்றுப்பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றில் தீப் பற்றிக்கொண்டது. அதில் பயணம் செய்து கொண்டிருந்த 32 பயணிகளும் ஓட்டுநரும் காயமின்றி உயிர்தப்பினர்.
ஜொகூரிலிருந்து கோலாலம்பூர் சென்றுகொண்டிருந்த போது, பேருந்தின் பின் புறத்திலிருந்து கரும் புகை கிளம்புவதைக் கண்ட அவர் உடனடியாகப் பயணிகளை பேருந்திலிருந்து இறங்குமாறு கூறினார்.
தீ, பேருந்தின் இயந்திரத்திலிருந்து மூண்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகள் காட்டுகின்றன.
வாகனத்தில் மூண்ட தீயை அணைக்க 6 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீயில் சுற்றுப்பயணிகளின் உடமைகளும் கடப்பிதழ்களும் எரிந்துவிட்டன என்று ஸ்டார் செய்தி நிறுவனம் தெரிவித்தது. கோலாலம்பூரில் அமைந்துள்ள இந்தோனேசிய தூதரகத்தில் அவர்களுக்குத் தற்காலிக கடப்பிதழ்களைத் தயாரிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.