ஆதரவு தெரிவிக்க அடையாள அட்டைகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்த இந்தோனீசியர்கள்
ஜக்கர்த்தாவின் முன்னாள் ஆளுநர் பசுக்கி பூர்ணாமாவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகப் பல்லாயிரக்கணக்கானோர் அவர்களின் அடையாள அட்டையை உச்சநீதிமன்றத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
ஜக்கர்த்தாவின் முன்னாள் ஆளுநர் பசுக்கி பூர்ணாமாவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகப் பல்லாயிரக்கணக்கானோர் அவர்களின் அடையாள அட்டையை உச்சநீதிமன்றத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
திரு பசுக்கியைச் சிறையிலிருந்து விடுவித்தால், அவருக்கு உத்தரவாதம் தரும் நோக்கில், அடையாள அட்டைகளை அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
அவர்மீது சுமத்தப்பட்ட சமய நிந்தனை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திரு பசுக்கிக்கு, ஈராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டுவருகின்றன.
ஜக்கர்த்தாவுக்கு வெளியே வசிப்போர், அடையாள அட்டையின் நகலை அனுப்பிவைத்துள்ளதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன