Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வளர்ப்புத் தந்தையால் 20 வாரங்கள் கருவுற்ற 10 வயதுச் சிறுமி கருவைக் கலைக்க அனுமதி

பத்து வயது சிறுமி தமது வளர்ப்புத் தந்தையால் பலமுறை பாலியல் வன்முறைக்கு உள்ளானாள்.

வாசிப்புநேரம் -

புதுடில்லி: பத்து வயதுச் சிறுமி தன் வளர்ப்புத் தந்தையால் பலமுறை பாலியல் வன்முறைக்கு ஆளானாள்.

தற்போது அந்தச் சிறுமி கிட்டத்தட்ட 20 வாரங்கள் கருவுற்றிருக்கிறாள்.

இந்தியாவின் கடுமையான கருக்கலைப்புச் சட்டத்தால் அவர் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடும்.

ஆனாலும் நடந்த சம்பவத்தையும் சிறுமியின் வயதையும் கருத்திற்கொண்டு கருக்கலைப்புச் செய்யலாமா என்று நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும்.

குழந்தை பெற்றுக்கொள்வதால் சிறுமியின் உயிருக்கு எந்தவிதத்திலும் ஆபத்து இல்லை என வட இந்திய மாநிலமான ஹரியானாவில் உள்ள மருத்துவக் கழகம் தெரிவித்தது.

இந்நிலையில், 10 வயது சிறுமி தனது கருவைக் கலைக்க அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளை விரும்பும் இந்தியாவில் கருக்கலைப்பு செய்யக்கூடாது என்பதை வலியுறுத்த கருக்கலைப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்துப் புகார் செய்வதற்கான உதவித் தொலைபேசி எண்ணில் வந்த அழைப்பின்மூலம் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததாகக் காவல் துறை தெரிவித்தது.

சிறுமியின் அம்மாவே அவசர உதவி எண்ணை அழைத்திருக்கிறார்.

சம்பவத்துக்குப் பின் சிறுமி மனரீதியாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சரியாகப் பேச முடியவில்லை என்றும் கூறப்பட்டது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்