புகைமூட்டப் பிரச்சினை குறித்த சந்திப்பில் கலந்துகொள்ள கோலாலம்பூர் செல்லவிருக்கும் மசகோஸ்
சுற்றுப்புற நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி , எல்லை தாண்டிய புகைமூட்டப் பிரச்சினை குறித்த சந்திப்பில் கலந்துகொள்ள நாளை கோலாலம்பூர் செல்கிறார்.
சுற்றுப்புற நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி , எல்லை தாண்டிய புகைமூட்டப் பிரச்சினை குறித்த சந்திப்பில் கலந்துகொள்ள நாளை கோலாலம்பூர் செல்கிறார்.
புகைமூட்டம் வராமல் தடுப்பதற்கு, புருணை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லந்து ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான முக்கிய விவகாரங்கள் குறித்து அவர் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியான் வட்டாரத் துணைக் கண்காணிப்புக் கட்டமைப்பை நிறுவுவது...
தீயணைப்பு முயற்சிகளுக்கு ஆதரவாக வட்டார, அனைத்துலக உதவிகளைத் திரட்டுவது...
நாடுகளுக்கிடையிலான தகவல் பரிமாற்றம்....ஆகியவை அவற்றில் அடங்கும்.