தெற்காசியாவில் வெள்ளம் - அபாயகரமான நெருக்கடி நிலை
தெற்காசியாவில் வெள்ளத்தால் அபாயகரமான நெருக்கடி நிலை நிலவி வருவதாகச் செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.
தெற்காசியாவில் வெள்ளத்தால் அபாயகரமான நெருக்கடி நிலை நிலவி வருவதாகச் செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.
கனத்த மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் இதுவரை 340-கும் அதிகமானோர் மாண்டுள்ளனர். இந்தியா, நேப்பாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 16 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கட்டடங்கள், சாலைகள் ஆகியவை சேதமடைந்துள்ளன.
மேலும், வெள்ளத்தில் பயிர்கள் அழிந்துபோவதால் மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்குகிறது. அத்துடன், நீரினால் ஏற்படும் நோய்கள் அதிகரிக்ககூடும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.