நெடுஞ்சாலையில் நெருப்புக்கோழி
தென்கொரிய நெடுஞ்சாலையில் திரிந்துகொண்டிருந்த நெருப்புக்கோழி ஒன்று காப்பாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்கொரிய நெடுஞ்சாலையில் திரிந்துகொண்டிருந்த நெருப்புக்கோழி ஒன்று காப்பாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென் சுங்சியோங் மாநிலத்தின் சியோஹே கிராண்ட் பாலத்தில் நெருப்புக்கோழி ஒன்று ஓடிக்கொண்டிருந்தாய் வாகனமோட்டி ஒருவர் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார்.
டங்ஜின், பியோங்டெக் ஆகிய நகரங்களை அந்தப் பெரும் பாலம் இணைக்கிறது.
சுமார் 20 நிமிடங்களில் அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்து நெருப்புக்கோழியைக் காப்பாற்றினர். நெருப்புக்கோழியின் நடமாட்டத்தால் விபத்து எதுவும் நேரவில்லை. அது எப்படி அந்தப் பாலத்திற்குச் சென்றது என்பதற்கான விடையை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.