முடிவடைந்தது ஃபிலிப்பீன்ஸ் பிணைப்பிடிப்பு நாடகம்
ஃபிலிப்பீன்ஸின் தென் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் பிணைபிடிக்கப்பட்டிருந்த சம்பவம் முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிலிப்பீன்ஸின் தென் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் பிணைபிடிக்கப்பட்டிருந்த சம்பவம் முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்குள் அதிரடியாகப் புகுந்த ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் சில மாணவர்களைப் பிணைபிடித்து வைத்திருந்தனர்.
இப்போது பள்ளியை விட்டு பயங்கரவாதிகள் வெளியேறிவிட்டதாக ராணுவப் பேச்சாளர் கூறினார்.
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பயங்கரவாதிகள் இன்னமும் பொதுமக்களில் ஐவரைப் பிடித்துவைத்துள்ளனரா என்று விசாரணை நடக்கிறது.
எந்தக் குழந்தையும் பிணைபிடிக்கப்படவில்லை என ராணுவம் உறுதிப்படுத்தியது.
அரசாங்கத் துருப்புகளுக்கும் வன்முறையாளர்களுக்கும் இடையே ஐந்தாவது வாரமாக மிண்டானாவ் தீவில் சண்டை நடக்கிறது.