பிரகாசமாக மின்னும் சூரத் வைரத் துறை
வைரம்.. அந்த விலைமதிப்புமிக்க பொருளுக்குப் பின்னால் பலரின் கடின உழைப்பு இருக்கிறது.
வைரம்.. அந்த விலைமதிப்புமிக்க பொருளுக்குப் பின்னால் பலரின் கடின உழைப்பு இருக்கிறது.
வைரத் தொழிலில் சுறுசுறுப்பாக இயங்கும் சூரத் நகர்.
தொழில்நுட்பத்தின் தாக்கம் வைரத் தொழிலின் பளபளப்பைக் கூட்டியுள்ளது. ஒளிக்கற்றையும், மேம்பட்ட கணினி மென்பொருளும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
பல ஆண்டுகளாகப் பிரகாசமாக மின்னிக் கொண்டிருக்கும் சூரத் வைரத் தயாரிப்புகள் உலகத் தரத்தை மிஞ்சிவிட்டன. இயந்திரத்தைச் சுற்றி சிலர் உட்கார்ந்துகொண்டு பட்டைதீட்டிய காலம் மலையேறிவிட்டது.
தொழில்நுட்பம் மெல்ல மெல்ல தலைதூக்கவே மாற்றமும் வரத் தொடங்கியது]. அந்த வளர்ச்சியால் ஆரோக்கியத்திலும் பாதுகாப்பிலும் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
நுரையீரலைப் பாதிக்கக்கூடிய வைரத் தூசுப்புகையை ஊழியர்கள் இப்போது மிகக்குறைவாகவே சுவாசிக்கின்றனர்.
புத்தாக்க வழிகள் சூரத் வைரத்தொழிலை தொடர்ந்து இலாபகரமாக வைத்திருப்பதில் அதிகமாகவே கைகொடுக்கின்றன.
சீனா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து எழும் போட்டியைத் திறம்படச் சமாளிப்பதில் புத்தாக்கம் அதிகம் உதவுகிறது.
பலரின் வேலையை ஒரே இயந்திரக் கருவி செய்துவிடுகிறது.
பலர் சேர்ந்து பட்டைதீட்டிய வைரம் இயந்திரத்தின் மூலமும் மெருகேறுகிறது.
விரைவாக வேலை நடக்கிறது. மனிதவளம் மிச்சப்படுகிறது. பெரிய தொழிற்சாலைகள் இதனால் நன்கு பயனடையலாம்.
சிறுசிறு தொழிற்சாலைகள் சிரமப்படுகின்றன.
அவை சமயங்களில் மூடப்படும் நிலையும் உருவாகிறது.
இயந்திர மனிதக் கருவிகள் செய்யலாம். ஆனால் எல்லாவற்றையும் அவற்றால் செய்துவிட முடியாது. மனிதர்களின் ஈடுபாடு முக்கியம். அது இல்லாமல் பணி நிறைவடையாது என்று சில வைரத் தொழில் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
பிழைப்பு என்னவாகும் என்று பயந்த ஊழியர்களுக்கு இதனால் ஒரு சிறு நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியுள்ளது.