அபு சயாஃப் குழுவுடன் தொடர்புடைய ஃபிலிப்பீன்ஸ் நாட்டவர் 7பேரைக் கைது செய்தது மலேசியா
அபு சயாஃப் பயங்கரவாதக் குழுவின் உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 7 பாதுகாவலர்களைக் கைது செய்துள்ளது மலேசியக் காவல்துறை.
கோலாலம்பூர்: அபு சயாஃப் பயங்கரவாதக் குழுவின் உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 7 பாதுகாவலர்களைக் கைது செய்துள்ளது மலேசியக் காவல்துறை.
அவர்கள் ஃபிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். போலியான ஆணவங்களைப் பயன்படுத்தி சண்டகான், சபா வழியாக அந்தச் சந்தேக நபர்கள் மலேசியாவினுள் நுழைந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
இம்மாதம் 14ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், அவர்கள் கைதாயினர்.
22வயதிலிருந்து 38வயது வரையிலான அந்த 7 சந்தேக நபர்கள் சிலாங்கூர், கோலாலம்பூர் பகுதியில் அமைந்துள்ள சில தனியார் நிறுவனங்களில் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.