எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயன்ற மூவர் பலி
இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயன்ற மலையேறிகள் மூவர் வார இறுதியில் மாண்டனர். உயரமான இடங்களுக்குச் செல்லும்போது ஏற்படும் உடல்குறைவு அவர்களுடைய மரணத்துக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயன்ற மலையேறிகள் மூவர் வார இறுதியில் மாண்டனர்.
உயரமான இடங்களுக்குச் செல்லும்போது ஏற்படும் உடல்குறைவு அவர்களுடைய மரணத்துக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
கடந்த ஈராண்டுகளில், எவரெஸ்ட் சிகரத்தை அடையும் முயற்சியில் நடந்துள்ள ஆகத் துயரமான சம்பவம் இது.
மலேயேற்றத்தில் ஈடுபட்ட இன்னொருவரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பருவத்தில் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட முயல்வது ஆபத்தானது.
முன்னுரைக்க முடியாத வானிலை, பலத்த காற்று, கடுங்குளிர் ஆகிய சங்கடங்களை மலையேறிகள் சந்திக்க நேரலாம்.