Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சோய் சூன் சில்லுக்கு மூவாண்டு சிறைத்தண்டனை

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் குவென் ஹேயின் நெருங்கிய தோழி சோய் சூன் சில்லுக்கு மூவாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சோய் சூன் சில்லுக்கு மூவாண்டு சிறைத்தண்டனை

(படம்: Reuters)

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் குவென் ஹேயின் நெருங்கிய தோழி சோய் சூன் சில்லுக்கு மூவாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகத்திற்கு இடையூறு விளைவித்ததற்காகவும் அவருடைய மகளுக்காக அதிகாரத்தைத் தவறான வகையில் பயன்படுத்தியதற்காகவும் திருவாட்டி சோய்க்கு ஏழாண்டு சிறைத்தண்டனை விதிக்கவேண்டும் என்று இதற்கு முன்னர் வழக்குரைஞர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர்.

இதுவே திருவாட்டி சோய்க்கு எதிரான முதல் தீர்ப்பு. திருவாட்டி பார்க்கிற்காக வர்த்தக நிறுவனங்களிடமிருந்து கையூட்டுப் பெற்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு நீதீமன்றம் இன்னும் அவருக்குத் தீர்ப்பு விதிக்கவில்லை.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்