Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இன்று சோய் சூன் சிலின் வழக்கு தொடர்பான தீர்ப்பு

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் குவென் ஹேயின் நெருங்கிய தோழி சோய் சூன் சிலின் வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று வெளிவரவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
இன்று சோய் சூன் சிலின் வழக்கு தொடர்பான தீர்ப்பு

படம்: Seo Myeong-gon/Yonhap via REUTERS

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் குவென் ஹேயின் நெருங்கிய தோழி சோய் சூன் சிலின் வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று வெளிவரவிருக்கிறது.

தமது மகளின் ஆடம்பரத்திற்கு அதிகாரத்தைத் தப்பான வகையில் பயன்படுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பான விசாரணையின் தீர்ப்பு இன்று வெளிவரவுள்ளது.

திருவாட்டி பார்க்குடன் துணைசேர்ந்து வர்த்தக நிறுவனங்களில் இருந்து கையூட்டுப் பெற்றதாகவும் அவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

அவ்வாறு பெற்ற பணத்தின் ஒரு பகுதியை ஐரோப்பாவில் இருந்த தம் மகளின் சொகுசான வாழ்க்கைக்குப் பயன்படுத்தியுள்ளார். அவருக்கு குறைந்தது ஏழாண்டு சிறைத்தண்டனை விதிக்குமாறு வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் கேட்டுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்