மலேசியாவில் காணாமற்போன 9 கடற்படை அதிகாரிகள் மீட்பு
மலேசியாவில் காணாமற்போன கடற்படை அதிகாரிகள், 9 பேர், பாதுகாப்புடன் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் காணாமற்போன கடற்படை அதிகாரிகள், 9 பேர், பாதுகாப்புடன் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 4 நாட்களுக்கு அவர்களைக் காணவில்லை.
ஜோகூர் பாரு கடற்பகுதிக்கு அருகே, அந்த ஊழியர்கள் இரண்டு மீன்பிடிப் படகுகளுடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலேசியக் கடற்பகுதயில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிரான முயற்சிகளை எடுத்தபோது அவர்கள் காணாமல்போனதாகக் கூறப்பட்டது.
கடற்படையினரைக் கண்டுபிடிக்க மலேசியா 11 கப்பல்களையும் இரண்டு ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்தியது.