இந்தியாவில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலி
இந்தியாவின் உத்தர்கண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில், 21 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர்; 7 பேர் காயம் அடைந்தனர்.
இந்தியாவின் உத்தர்கண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில், 21 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர்; 7 பேர் காயம் அடைந்தனர்.
அவர்கள் பிரபல சுற்றுலாத்தளமான கங்கோத்ரியிலிருந்து திரும்பிச் சென்று கொண்டிருந்ததாய் அதிகாரிகள் கூறினர்.
அந்தத் துயரச் சம்பவம் நேற்று மாலை நடந்தது.
பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்கு முக்கிய காரணம் எனக் கூறப்பட்டது.
இதுவரை 17 சடலங்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணி தொடர்கிறது.