வலைப்பதிவாளரின் குடியுரிமையை ரத்து செய்த வியட்நாமிய அரசாங்கம்
வியட்நாமில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரெஞ்சு - வியட்நாமிய வலைப்பதிவாளர் ஒருவர் நாடு கடத்தப்படுவதற்கான உத்தரவை அந்நாட்டு அரசாங்கம் பிறப்பித்துள்ளது. அதன்படி, முன்னாள் அரசியல் கைதியான 62-வயது ஃபாம் மின் ஹோங்கின் (Pham Minh Hoan),குடியுரிமை, அண்மையில் ரத்து செய்யப்பட்டது.
வியட்நாமில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரெஞ்சு - வியட்நாமிய வலைப்பதிவாளர் ஒருவர் நாடு கடத்தப்படுவதற்கான உத்தரவை அந்நாட்டு அரசாங்கம் பிறப்பித்துள்ளது. அதன்படி, முன்னாள் அரசியல் கைதியான 62-வயது ஃபாம் மின் ஹோங்கின் (Pham Minh Hoang),குடியுரிமை, அண்மையில் ரத்து செய்யப்பட்டது.
வியட்நாமின் அண்மை வரலாற்றில், ஒருவரின் குடியுரிமை ரத்து செய்யப்படுவது அதுவே முதல்முறை. 2011-ஆம் ஆண்டு, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில், அவர் தண்டிக்கப்பட்டார். அப்போது, அவர் வியட்நாமிய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கத்தில், பலதரப்பட்ட செய்திகளை வெளியிட்டார்.
அதற்காக அவர் 17-மாத சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். அதனை அடுத்து, அவர் மூன்று ஆண்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இருப்பினும், அவர் தொடர்ந்து, சமூக ஊடகங்களின் வழி, அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளைப் பரப்பி வந்ததால், அவரது குடியுரிமை ரத்து செய்யப்பட்டு, அவர் நாடு கடத்தப்படுகிறார்.