ஜக்கார்த்தா பேருந்து முனைய வெடிப்பில் ஐவர் பலி
இந்தோனேசிய தலைநகர் ஜக்கார்த்தாவில் நேற்றிரவு நடந்த வெடிப்பு சம்பவங்களில் 5 பேர் மாண்டனர்.
இந்தோனேசிய தலைநகர் ஜக்கார்த்தாவில் நேற்றிரவு நடந்த வெடிப்பு சம்பவங்களில் 5 பேர் மாண்டனர்.
10 பேர் காயமடைந்தனர்.
ஜக்கார்த்தாவின் கிழக்கில் அமைந்துள்ள கம்போங் மலாயூ (Kampung Melayu) பேருந்து முனையத்துக்கு அருகில் 2 வெடிப்புச் சம்பவங்கள் ஏற்பட்டன.
அண்மை காலமாக, இந்தோனேசியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்நாட்டு பாதுகாப்புக் படைகள் உச்ச விழிப்புநிலையில் உள்ளன.