ஜக்கார்த்தா பேருந்து முனையத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுபேற்றுள்ளது
இந்தோனேசிய தலைநகர் ஜக்கார்த்தாவில், பேருந்து முனையத்தில் நடத்த தாக்குதலை ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய, ஜமா அன்ஷருட் டௌலா (Jamaah Ansharut Daulah) அமைப்பு நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தோனேசிய தலைநகர் ஜக்கார்த்தாவில், பேருந்து முனையத்தில் நடத்த தாக்குதலை ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய, ஜமா அன்ஷருட் டௌலா (Jamaah Ansharut Daulah) அமைப்பு நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த அந்தப் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதலை நடத்திய இரண்டு தற்கொலையாளிகளும், ஜமா அன்ஷருட் டௌலா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று, இந்தோனேசிய பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர், செனல் நியூஸ்ஏஷியாவிடம் கூறினார்.
அந்த அமைப்பை, பயங்கரவாத அமைப்பாக, அமெரிக்கா இவ்வாண்டு வகைப்படுத்தியது.
2015ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அந்த அமைப்பு, இந்தோனேசியாவில் தளம் கொண்டுள்ளது.