Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தவறான எண்ணை அழுத்தினார். மணப்பெண்ணாய் மாறினார், அமிலத் தாக்குதலுக்குள்ளான இந்திய பெண்.

நேரில் பார்க்காமல், காதலியின் குரலுக்கு அடிமையாகி, பின்னர் அவரது கையைப் பிடித்தார் 27 வயது ரவி சங்கர் சிங்.

வாசிப்புநேரம் -

மும்பையின் காதல் கதை.

நேரில் பார்க்காமல், காதலியின் குரலுக்கு அடிமையாகி, பின்னர் அவரது கையைப் பிடித்தார் 27 வயது ரவி சங்கர் சிங்.

அவர் மணந்தது சாதாரண பெண்ணை அல்ல... வாழ்க்கையில் சவால்களைத் தாண்டி வாழ்ந்து வந்த பெண்ணை.

25 வயது லலிதா பன்சி. அமிலத் தாக்குதலுக்கு உள்ளானவர்.

அதில் அவருக்கு அகத்தில் மட்டும்தான் பாதிப்பு. புறத்தில் அல்ல.

அவர்களது காதல் கதைக்கு வயது 3 மாதங்கள் மட்டுமே.

ஆனால் ஆயுட்காலம் வரை இனி அது தொடரவுள்ளது.

ஏதோ ஒரு நாள், தவறான எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார் லலிதா.

அது, திரு ரவியின் கைபேசிக்கு அழைப்பை விடுக்க, அங்கிருந்துத் தொடங்கியது அவர்களது பயணம்.

பழகத் தொடங்கியதுமே தாம் ஒரு அமில தாக்குதலுக்கு உள்ளானவர் என்பதை திரு ரவியிடம் வெளிப்படையாக கூறியிருக்கிறார் லலிதா.

அதற்கு பதிலளித்த திரு ரவி, தமக்கு லலிதாவின் முகத்தைப் பற்றி அக்கறையில்லை. லலிதா இனிமையானவள். நாம் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருப்பதையே தாம் விரும்புவதாக சொன்னார்.

அவர்களது திருமணத்துக்கு சமூகத்திடமிருந்து பெரும் ஆதரவு.

அவர்களது காதல் பயணம், திருமண வாழ்க்கை இனிதே தொடரவேண்டும் என்பது அவர்களது விருப்பம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்