துறைமுகத்துக்குக் கொண்டுவரப்படவுள்ள செவோல் கப்பல்
தென் கொரியாவின் செவோல் கப்பல் அடுத்த சில நாட்களில், கொரிய தீபகற்பத்தின் தென்மேற்கில் அமைந்துள்ள துறைமுகத்துக்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் கொரியாவின் செவோல் கப்பல் அடுத்த சில நாட்களில், கொரிய தீபகற்பத்தின் தென்மேற்கில் அமைந்துள்ள துறைமுகத்துக்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆழ் கடலில் மூழ்கியிருந்த கப்பலை, தரைக்குக் கொண்டுவர நான்கு நாட்கள் எடுத்தன.
நேற்றிரவு முதன்முறையாக, மூழ்கியக் கப்பல் பாகங்கள் அனைத்தும் ஒன்று திரட்டப்பட்டன. ஆழ்கடலில் இருந்து அந்தப் பகுதிகளை மேல் எடுக்க நீர்மூழ்கிக் கப்பல் உபயோகிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட கப்பலில் இருந்து நீரையும் எண்ணெயையும் வடிகட்டுவதற்கான பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதனை முடிக்க சுமார் மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.