மராவியில் கொல்லப்பட்ட மலேசியர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டனர்
பிலிப்பீன்ஸின் மராவி நகரில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட மலேசியர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பிலிப்பீன்ஸின் மராவி நகரில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட மலேசியர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று மராவி நகரில் கிளர்ச்சியாளர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களில் இருவர் மலேசியர்கள் என்று புலனாய்வுத் துறையை மேற்கோள்காட்டி மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஒருவர் கிளந்தானைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் அஸ்மாவி (Abdurahman Asmawi),
இன்னொருவர் கெடாவைச் சேர்ந்த கம்ஸா யஹ்யா(Kamsa Yahya).
பிலிப்பீன்ஸ பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் அவர்கள் கொல்லப்பட்டதாக மலேசியத் துணைப் பிரதமர் Ahmad Zahid Hamidi உறுதிப்படுத்தியுள்ளார்.
மலேசியாவின் பயங்கரவாத முறியடிப்பு சிறப்புப் பிரிவு கூடுதல் தகவல்களை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.