“தப்புக்கணக்குப் போட்டால், விளைவு பயங்கரமாக இருக்கும்”: அமைச்சர் விவியன்
ஆசியான் மாநாடு இன்று மணிலாவில் தொடர்கிறது.
மணிலாவில் நடைபெற்று வரும் ஆசியான் மாநாட்டில், கொரியத் தீபகற்பத்தில் அதிகரித்துவரும் பதற்ற நிலை, தென் சீனக் கடல் விவகாரம் போன்றவை குறித்து பேசப்படவுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து வெகுதூரத்தில் இருக்கும் பிரச்சினையாகக் கொரிய தீபகற்ப விவகாரம் இருந்தாலும், அதில் பகைமை ஏற்பட்டாலோ தப்புக்கணக்குப் போட்டாலோ விளைவு பயங்கரமாக இருக்கும் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.