Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

புலி தாக்கியதில் இளையர் மரணம்

மேற்கு சீனாவின் நிங்போ யொங்கோர் (Ningbo Youngor) விலங்கியல் தோட்டத்தில் சுற்றுப்பயணியைப் புலி தாக்கியது.

வாசிப்புநேரம் -

பெய்ச்சிங், சீனா: மேற்கு சீனாவின் நிங்போ யொங்கோர் (Ningbo Youngor) விலங்கியல் தோட்டத்தில் சுற்றுப்பயணியைப் புலி தாக்கியது.
பின்னர் அவரை தரதரவென இழுத்துத் சென்று மரங்களுக்கு மத்தியில் ஓடியது.

உடனடியாக அங்கிருந்தோர் வெளியேற்றப்பட்டனர். மீட்பு நடவடிக்கை ஒரு மணி நேரம் நீடித்தது. தாக்கப்பட்ட ஆடவர் மாண்டது மருத்துவமனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

புலியின் இருப்பிடத்திற்குள் எப்படி அந்த இளையர் நுழைந்தார் என்பது பற்றிய விவரங்கள் தெளிவாக இல்லை. புலியை விரட்டுவதற்கு அதிகாரிகள் பட்டாசுகளைப் பயன்படுத்தவேண்டியிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

இளையரைப் புலி கடித்துக் குதறுவதைக் கண்டதாகச் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்