முதலைக்குள் எஞ்சிய மனித உடற்பாகங்கள்
ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் மெளபேரே ஆற்றிலிருந்து அகற்றப்பட்ட முதலைக்குள் மனிதனின் உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் மெளபேரே ஆற்றிலிருந்து அகற்றப்பட்ட முதலைக்குள் மனிதனின் உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
4.3 மீட்டர் உயரம் கொண்ட அந்த முதலை 79 வயது மூதாட்டியை விழுங்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
முதியோர் பராமரிப்பு இல்லத்திலிருந்து வெகுதூரம் நடந்து சென்ற அந்த மூதாட்டியை முதலைக் கொன்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மறதி நோய் கொண்ட ஆன் காமிரோன் என்ற அந்த மூதாட்டி காணாமல் போனதாகக் கடந்த வாரம் புகார் கொடுக்கப்பட்டது.
தற்போதைய நிலை அவரின் குடும்பத்துக்குப் பேரதிர்ச்சி கொடுத்திருந்தாலும், முதலைகள் எதனையும் கொல்ல வேண்டாம் என ஆனின் மகன் கூறியிருக்கிறார்.