இந்திய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் அத்துமீறுகிறார்கள்: சீனா
இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள், திபெத்துடனான இந்திய எல்லையை ஊடுருவி, சீன எல்லைக்குள் நுழைவதாகச் சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள், திபெத்துடனான இந்திய எல்லையை ஊடுருவி, சீன எல்லைக்குள் நுழைவதாகச் சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.
எல்லைப் பகுதியில் சீனாவின் வழக்கமான நடவடிக்கைகளுக்கு இந்திய எல்லைக் காவல் படையினர் ஊறு விளைவித்ததாகச் சீன வெளியுறவு அமைச்சு கூறியது.
இந்தியா அவர்களை உடனடியாக மீட்டுக்கொள்ளவேண்டும் என்றும் அது கூறியது.
எல்லை குறித்த சீனாவின் நேர்மையை இந்தியா மதிக்கவேண்டும்; மேலும், எல்லை குறித்து இரு நாடுகளுக்கிடையில் எட்டப்பட்ட ஒப்பந்தங்களையும் அது மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்று சீனா வலியுறுத்தியது.