'ஜொகூரில் சிங்கப்பூரருக்கு சிகிச்சை': குற்றச்சாட்டுகளின் தொடர்பில் மலேசியா புகார்
'ஜொகூர் மருத்துவமனையில் சிங்கப்பூரருக்கு சிகிச்சை':குற்றச்சாட்டுகளின் தொடர்பில் மலேசியா புகார்
ஜொகூர் பாரு விபத்தின் தொடர்பில் வெளியான குற்றச்சாட்டுகளை மறுக்க, மலேசியா அதிகாரபூர்வ புகார் ஒன்றைச் சிங்கப்பூருக்குச் சமர்ப்பிக்க முடிவு செய்திருக்கிறது.
அந்த விபத்தில் சிக்கிய சிங்கப்பூரருக்குச் சரியான மருத்துவ உதவிகள் அளிக்கப்படவில்லை என்று இணையத்தளச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது மனவருத்தத்தை அளித்ததாக மலேசியா சொன்னது.
மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் சுப்ரமணியன் அதன் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்.
அத்தகைய குற்றச்சாட்டுகள் நாட்டின் நற்பெயருக்கும், சுகாதார ஊழியர்களின் பெயருக்கும் கேடுவிளைவிக்கும் என்று அவர் சொன்னார்.
சிங்கப்பூர்த் தூதரகத்தின் பதிலுக்குக் காத்திருக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
விபத்தில் சிங்கப்பூரர்கள் இருவர் காயமடைந்தனர்.
திரு ஜஸ்டினியன் டான் என்ற ஆடவர் சிகிச்சை பலனின்றி மாண்டார்.
தொடர்புடைய செய்தி: