Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சிங்கப்பூரர் மாண்ட ஜொகூர் விபத்து: காரால் இடித்த சந்தேக நபர் கைது

சிங்கப்பூரர் மாண்ட ஜொகூர் விபத்து: காரால் இடித்த சந்தேக நபர் கைது

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரர் மாண்ட ஜொகூர் விபத்து: காரால் இடித்த சந்தேக நபர் கைது

(மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட திரு டான், படம்: Ernest Lee)

ஜொகூர் பாருவில் சிங்கப்பூரர் ஜஸ்டினியன் டான் மாண்ட விபத்தின் தொடர்பில், அவரைக் இடித்ததாக நம்பப்படும் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மலேசியாவின் பெரிடா ஹரியான் நாளேடு அதனைத் தெரிவித்தது.

அவர் 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் என்று அது குறிப்பிட்டது.

சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக ஜொகூர் காவல்துறை உயரதிகாரி சொன்னார்.

மாண்ட 24 வயது திரு டான், 5 நண்பர்களுடன் ஜொகூர் பாருவில் நள்ளிரவு உணவை முடித்துக்கொண்டு, சிங்கப்பூர் திரும்பிக்கொண்டிருந்தார்.

அதிகாலை 3 மணியளவில் ஜொகூரின் தமான் அபாட் பகுதியில் விபத்து நேர்ந்தது.

பின் ஜொகூரின் சுல்தானா அமினா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றித் திரு டான் மாண்டார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்