பீட்ஸா வெட்டும் கத்தியைக் கொண்டு தாயையும் தங்கையையும் கொன்றதை ஒப்புக்கொண்ட மகன்
இந்தியாவின் நொய்டா நகரில், பீட்ஸா வெட்டும் கத்தியைக் கொண்டு தாயையும் தங்கையையும் கொன்றதை மகன் ஒப்புக்கொண்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நொய்டா நகரில், பீட்ஸா வெட்டும் கத்தியைக் கொண்டு தாயையும் தங்கையையும் கொன்றதை மகன் ஒப்புக்கொண்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்த 16 வயது இளையர் படிப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் தாயார் அவனை அடிக்கடி கண்டித்திருக்கிறார்.
சம்பவம் கடந்த வாரம் நடந்தது. அன்றும் தாயார் திட்டியதோடு, மகனை அடித்ததாகவும் கூறப்பட்டது.
கோபத்தில் சினமடைந்த இளையர் தனது 42 வயது தாயையும் 11 வயது தங்கையையும் கொன்ற மகன் பின் வீட்டை விட்டு அமைதியாக வெளியானது கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருக்கிறது.
இரு சடலங்களையும் இரத்தம் படிந்த மகனின் ஆடைகளையும் காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
சில நாட்களுக்கு முன் இளையரை அதிகாரிகள் வாரனாசியில் பிடித்தனர்.
இளையரின் கொடூரச் செயல், அவர் விளையாடிவந்த வீடியோ விளையாட்டால் தூண்டப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.