கல்யாண வீட்டில் கத்திக் குத்து: ஒருவர் மரணம்
தெற்கு வியட்நாமில் கல்யாண விருந்துகளில் கராவோக்கே பாடல்கள் பாடுவது சாதாரணம்.
தெற்கு வியட்நாமில் கல்யாண விருந்துகளில் கராவோக்கே பாடல்கள் பாடுவது சாதாரணம்.
நுவென் ஙொக் டியெப் என்பவர் விருந்தில் கராவோக்கே பாடல் பாடும்போது அங்கு வந்த மற்றொரு விருந்தினர் அவரைக் கேலி செய்து ஒலிவாங்கியைத் தட்டிப் பறித்தார்.
கோபமடைந்த டியெப் கத்தியை எடுத்து அந்த விருந்தினரைச் சரமாரியாகத் தாக்கினார்.
சண்டையைத் தடுக்க முயன்ற மற்றொரு விருந்தினரான திரு. அன் கத்திக்குத்துக்கு உள்ளாயினர்.
திரு. அன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் இறந்தார். டியெப் கொலைக்குற்றத்துக்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.