ரஜினியிடம் நஜிப் விடுத்த வேண்டுகோள்
நடிகர் ரஜினிகாந்த் தமது அடுத்த கபாலி திரைப்படத்தை மலேசியாவில் எடுக்குமாறு அந்நாட்டின் பிரதமர் நஜிப் ரசாக் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தாம் அவ்வாறு திரு ரஜினிகாந்திடன் கேட்டதாகத் திரு நஜிப் சொன்னார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தமது அடுத்த கபாலி திரைப்படத்தை மலேசியாவில் எடுக்குமாறு அந்நாட்டின் பிரதமர் நஜிப் ரசாக் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தாம் அவ்வாறு திரு ரஜினிகாந்திடன் கேட்டதாகத் திரு நஜிப் சொன்னார்.
மலேசியாவின் தனித்துவங்களை இந்தியாவிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளுக்கு விளம்பரப்படுத்துவதற்காக அவ்வாறு கேட்டதாய்த் திரு நஜிப் கூறினார்.
'கபாலி' திரைப்படத்தின்வழி மலேசியாவின் அழகைக் கண்டதாகத் திரு நஜிப் புகழ்ந்தார். தமது வேண்டுகோளுக்கு திரு ரஜினிகாந்த வரவேற்பு அளித்தாகவும் திரு நஜிப் சொன்னார்.