'இமைக்கா நொடிகள்' முதற்பார்வை வெளியீடு
டோரா படத்துக்குப் பின்னர் நயன்தாரா நடிக்கும் படம் 'இமைக்கா நொடிகள்'.
டோரா படத்துக்குப் பின்னர் நயன்தாரா நடிக்கும் படம் 'இமைக்கா நொடிகள்'.
அந்தப் படத்தின் முதற்பார்வை வெளியிடப்பட்டுள்ளது.
'டிமாண்டி காலனி' படத்தை இயக்கிய அஜய்ஞானமுத்து இயக்கிவரும் இந்தப் படத்தில் அதர்வா, இந்தித் திரையுலகில் பிரபல இயக்குநராக விளங்கும் அனுராக் காஷ்யப்பும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றார்.
படத்தின் முதற்பார்வையில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் ஆகிய மூவருமே கையில் முகமூடியை வைத்துள்ளனர்.
வித்தியாசமாக உள்ள அந்த முதற்பார்வைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.