நாளை 'பாகுபலி 2' - இன்றே உற்சாகம்
பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நாளை வெளிவரவுள்ளது.
பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நாளை வெளிவரவுள்ளது.
படத்திற்காக மிக ஆவலாய்க் காத்திருக்கின்றனர் கோடிக்கணக்கான ரசிகர்கள்.
அந்த ஆவலுக்கு மேலும் ஆவலை ஊட்டுகின்றன படத்திற்கான புதிய சுவரொட்டிகள்.
சத்யராஜ் ஏற்றிருக்கும் கட்டப்பா கதாபாத்திரம், அமரேந்திர பாகுபலி மன்னரைக் கொல்லும் காட்சியை அந்தச் சுவரொட்டி சித்தரிக்கிறது.
கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார். முதலாவது படத்தைப் பார்த்தவர்களுக்குஅது புதிராகவே இருந்தது.
அந்தப் புதிருக்கு 'பாகுபலி 2' நாளை விடை கூறும்.
பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ் உள்ளிட்டோர் படத்தில் நடிக்கின்றனர்.
4K HD வடிவில் வெளியிடப்படும் முதல் இந்தியப் படம் என்ற சிறப்பைப் பெறுகிறது 'பாகுபலி 2'.