இலவசக் குரல் சேவை - இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம்
இந்தியாவில் ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு நிறுவனம், இலவசக் குரல் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு நிறுவனம், இலவசக் குரல் சேவையை அறிமுகம் செய்துள்ளது. நேற்று அறிமுகமான புதிய திட்டத்தின்கீழ், அதன் வாடிக்கையாளர்கள் இவ்வாண்டு இறுதிவரை, இந்தியா முழுதும் எங்கு வேண்டுமானாலும் இலவசமாகப் பேசிக் கொள்ளலாம்.
கைத்தொலைபேசி இணையப் பயன்பாட்டுக்கான கட்டணத்தையும் ரிலையன்ஸ் வெகுவாகக் குறைத்துள்ளது. அதனால் போட்டி நிறுவனங்களும், கட்டணத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன.