பீகாரில் வெடிகுண்டுத் தாக்குதல் - 8 கமாண்டோக்கள் பலி
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் குறைந்த்து 8 கமாண்டோக்கள் வெடிகுண்டுத் தாக்குதலில் மாண்டனர்.
பாட்னா, இந்தியா: இந்தியாவின் பீகார் மாநிலத்தில் குறைந்த்து 8 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) கமாண்டோக்கள் வெடிகுண்டுத் தாக்குதலில் மாண்டனர். நக்சல் படையினருடன் நிகழ்ந்த மோதலில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது.
நக்சல் படையை எதிர்த்து மேற்கொள்ளப்பட்டப் பணிகளில், சக்கர்பன்டா காடுகளில் இதுவே ஆக அதிகச் சேதம் விளைவித்த சம்பவம்.
வெடிப்பு நடந்த இடத்தில் ஆயுதங்களும் வெடிமருந்துகளும் கண்டெடுக்கப்பட்டன. குறைவான தொலைத்தொடர்புச் சேவையினால் சம்பவ இடத்தலிருந்து தகவல் தாமதமாக வருகிறது.
காடுகளில் துப்பாக்கிச் சண்டை நடந்துகொண்டிருந்ததால், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.