ஏர் இந்தியா விமானத்தில் புகை
இம்பாலுக்குப் புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 130க்கும் அதிகமானோர் மயிரிழையில் உயிர் தப்பினர்.
கொல்கத்தா, இந்தியா: இம்பாலுக்குப் புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 130க்கும் அதிகமானோர் மயிரிழையில் உயிர் தப்பினர்.
விமானத்தின் இயந்திரப்பகுதிக்குள் புகை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தச் சம்பவம் மதியம் 12.15 மணிக்கு நடந்தது.
AI 713 விமானம் விமான ஓடுபாதையில் நுழைவதற்கு முன் விமானத்தின் இயந்திரப் பகுதியில் புகை வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த விமானம் வேறு ஒரு ஓடுபாதைக்குக் கொண்டு செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
புதுடில்லியில் உள்ள ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளதாக கூறினார்.
அந்த விமானத்தை சோதனை செய்த ஏர் இந்தியா பொறியாளர்கள் விமானம் பயணம் மேற்கொள்ள பாதுகாப்பாக உள்ளதை உறுதிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.