கட்டடத்திலிருந்து நாயைத் தூக்கியெறிந்த ஆடவர்
சென்னையில் உள்ள கட்டடம் ஒன்றின் மொட்டை மாடியிலிருந்து ஆடவர் நாயைத் தூக்கி வீசியதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
சென்னையில் உள்ள கட்டடம் ஒன்றின் மொட்டை மாடியிலிருந்து ஆடவர் நாயைத் தூக்கி வீசியதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
நாயை அவ்வாறு வீசி எறிந்தவர் மருத்துவ இறுதியாண்டு மாணவர் என்று அண்மை தகவல்கள் கூறுகின்றன. அந்த வீடியோவை எடுத்தது அவருடய நண்பர் என்றும் கூறப்படுகிறது.அந்த இருவருக்கு எதிராக போலீசார் கைது நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. வாட்சப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்தக் கொடூர வீடியோ, இதுவரை 220,000 க்கும் மேற்பட்ட பார்வைகளை ஈர்த்துள்ளது.
நாய் உயிர் பிழைத்தது. தற்போது அது சிகிச்சை பெற்று வருவதாக, நாயைக் காப்பாற்றிய விலங்கு நல ஆர்வலர் ஷ்ரவன் கிருஷ்ணன், தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.