செல்பி எடுத்த பொறியியல் மாணவர் பலி
செல்ஃபி எடுக்க முயன்ற ஆந்திராவின் குர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் பரிதாபமாக ரயில் மோதி உயிரிழந்தார்.
செல்ஃபி எடுக்க முயன்ற ஆந்திராவின் குர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் பரிதாபமாக ரயில் மோதி உயிரிழந்தார்.
பொறியியல் மாணவரான இத்தூருஸ் பாட்சா ரயில் வேகமாக செல்லும்போது அதன் அருகே நின்று செல்ஃபி எடுக்க விரும்பினார்.
தமது நண்பர் ஹரிஸ்சுடன் கல்லூரி அருகே உள்ள ரயில்வே
தண்டவாளத்துக்கு சென்றார்.
அங்கு இருவரும் ரயில் வரும் நேரத்தில் ஒன்றாக நின்று செல்ஃபி எடுக்க முடிவு செய்தனர்.
அப்போது வேகமாக ஒரு ரயில் வந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்த இருவரும் செல்ஃபி எடுக்க தயாரானார்கள்.
ஆனால் அவர்கள் செல்பி எடுப்பதற்குள் ரயில் அருகே வந்து விட்டது. சுதாரித்துக் கொண்ட ஹரிஸ் தண்டவாளத்தில் இருந்து ஒதுங்கினார்.
ஆனால் இத்தூருஸ் மீது ரயில் மோதியது.