சுவாதி கொலை வழக்கு - சந்தேக நபர் கைது
சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளர் கொலைவழக்கில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், ராம்குமார் என்ற 24 வயது நபரை நேற்று நள்ளிரவு தமிழகப் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை: சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளர் கொலைவழக்கில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், ராம்குமார் என்ற 24 வயது நபரை நேற்று நள்ளிரவு தமிழகப் போலீஸார் கைது செய்தனர்.
விசாரணை செய்ய செங்கோட்டைக்கு போலீஸார் வருவதைத் தெரிந்து கொண்ட ராம்குமார் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டது.
சென்ற மாதம் 24ஆம் தேதி மென்பொறியாளர் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்டார்.