அன்றாடம் சமையலில் சேர்க்கவேண்டிய மளிகைப் பொருட்கள்
ஆரோக்கியமான உணவு என்பது சுவை குன்றியதல்ல. உப்பு, உறைப்பாக சுவையான சத்தான உணவை நாம் சாப்பிடலாம். தாளிப்புப் பெருட்களை சேர்த்தால் உணவில் தனித்துவமான வாசனை கூடும்.
ஆரோக்கியமான உணவு என்பது சுவை குன்றியதல்ல. உப்பு, உறைப்பாக சுவையான சத்தான உணவை நாம் சாப்பிடலாம். தாளிப்புப் பெருட்களை சேர்த்தால் உணவில் தனித்துவமான வாசனை கூடும்.
இஞ்சி
உடல்வலி, தலைவலி, மாத விலக்கின்போது ஏற்படும் வலி ஆகியவற்றை இஞ்சி நிவர்த்தியாக்கும்.
உடல் எடையைக் கட்டுப்படுத்த, சாப்பிடும் பதார்த்தங்களிலும் இஞ்சியைச் சேர்ப்பது நல்லது.
இலவங்கப்பட்டை
தனித்துவமான மணமும் சுவையும் கொண்டது, "cinnamon" - இலவங்கப்பட்டை. காப்பி அல்லது கேக்குடன் அதைச் சேர்க்கலாம்.
இலவங்கப்பட்டை - இந்தியச் சமையலில் முக்கிய தாளிப்புப் பொருள். அது நீரிழிவு நோயாளிகளுக்கு மிக நல்லது.
கறிவேப்பிலை
உணவுப் பதார்த்தங்களுடன் கறிவேப்பிலை சேர்த்துச் சமைக்கப்படுவதுண்டு. ஆனால், அந்த இலைகளைத் தனியாக மென்று சாப்பிடுவது உத்தமம்.
கறிவேப்பிலை - வயிற்றுக் கோளாறுகளைத் தடுக்க உதவுகிறது. நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு, கண்பார்வைக் கோளாறு, நரை ஆகிய பிரச்சினைகளுக்கும் கறிவேப்பிலை நல்ல தீர்வாகும்.
பூண்டு
ரத்த அழுத்தத்தைச் சமநிலைப்படுத்தவும், கொழுப்பைக் குறைப்பதற்கும் பூண்டு உதவுகிறது.