திறன்பேசி விற்பனையில் சாம்சுங்கை 'ஆப்பிள் விஞ்சும்': தென்கொரியா
தொழில்நுட்பப் பெருநிறுவனம் ஆப்பிள், போட்டி நிறுவனமான சாம்சுங்கைவிட அதிகமான கைத்தொலைபேசிகளை விற்கவுள்ளது. அதற்கு iPhone X கைத்தொலைபேசிகளின் விற்பனை பெரிதும் கைகொடுத்துள்ளது.
சோல்: தொழில்நுட்பப் பெருநிறுவனம் ஆப்பிள், போட்டி நிறுவனமான சாம்சுங்கைவிட அதிகமான கைத்தொலைபேசிகளை விற்கவுள்ளது. அதற்கு iPhone X கைத்தொலைபேசிகளின் விற்பனை பெரிதும் கைகொடுத்துள்ளது.
தென்கொரியாவின் யோன்ஹாப் நிறுவனம் அந்தத் தகவலை இன்று வெளியிட்டது.
TrendForce என்ற வர்த்தக ஆய்வு நிறுவனத்தின் தகவல்கள்படி,
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் திறன்பேசிச் சந்தையில் 19.1 விழுக்காட்டை ஆப்பிள் நிறுவனம் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சுங்கின் 18.2 விழுக்காட்டைவிட இது அதிகம்.
கடந்த காலாண்டில் சாம்சுங், சந்தையின் 21.1 விழுக்காட்டினைக் கைப்பற்றி முதல் இடத்தை வகித்தது. Galaxy Note 8 தொடரின் வெற்றி அதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஆப்பிளுக்கு அந்த விழுக்காடு 11.5 ஆக இருந்தது.
ஆயினும், ஆப்பிள் முந்திக்கொள்ளும் என்கிறது TrendForce. நாலாம் காலாண்டில் சாம்சுங் நிறுவனம் 77 மில்லியன் திறன்பேசிகளை விற்கும் என்றும் ஆப்பிள் நிறுவனம் 81 மில்லியன் திறன்பேசிகளை விற்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிளின் விற்பனையில் iPhone X மூன்றில் ஒரு பங்கு வகிக்கும் என்றும் முன்னுரைக்கப்பட்டது.